கோவை மாவட்டத்தில உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சனூர் மற்றும் சீரப்பாளையம், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரவளிமாதம்பூர், காங்கேயம்பாளையம் மற்றும் கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் மற்றும் காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதியன்று (வியாழன்) வரை சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழனன்று (நாளை) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழனன்று (நாளை) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.