ராம மோகன ராவ் வீட்டில் சோதனை முடிந்தது; மகனிடம் விசாரணை


தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகன ராவ், வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது; அதிகாரிகள் சோதனையை முடித்து புறப்பட்டனர்.

ரெய்டு :

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், அதிரடியாக சோதனை நடந்தது. இச்சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது. 

அதிகாரிகள் புறப்பட்டனர் :

அண்ணாநகரிலுள்ள ராவ் வீட்டில் விடிய விடிய சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை உயரதிகாரிகள் இன்று அதிகாலையில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராவ் வீட்டில் 24 மணி நேரமாக நடந்த சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர். தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் புறப்பட்டு சென்றனர். ரெய்டில் சிக்கிய ஆவணங்களை அதிகாரிகள் உடன் எடுத்து சென்றனர்.

5 இடங்களில் சோதனை நிறைவு :

ராவ் வீடு, மகன் விவேக் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நிறைவடைந்தது. மற்ற 8 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ராவ் மகன் விவேக்கை, விசாரணைக்காக திருவான்மியூர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். நந்தனத்திலுள்ள மகன் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...