கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.jpg)
மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அமல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பணபுழக்கம் தடைபட்டுள்ளது. பணம் எடுக்க மக்கள் வங்கிகள் முன்பாகவும், ஏ.டி.எம் மையங்கள் முன்பாகவும் நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது.
கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் 90 சதவிகித ஏ.டி.எம்கள் செயல்படாமல் இருந்து வருகின்றது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அனைத்திந்த இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வங்கி ஏ.டி.எம்-கள் அனைத்தும் முழுமையாக செயல்படவும், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக காலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவினையும் அவர்கள் வழங்கினர்.