தில்லியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்வச்பாரத் மற்றும் ஸ்டேடர்ஜிக் அப்லிகேசன் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் இப்பரிசினை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான்பாரதி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்தியது. இதில் 3000 இளம் விஞ்ஞானிகள், 300 கல்வி சார் துறையினர், 200 தொழில் துறையினர் என பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள், ஸ்வச் பாரத், பசுமை ஆற்றல், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட்டனர். இதில் மொத்தமாக மாணவர்களிடம் இருந்து 1300 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இஐஇ, இசிஎஸ், இஇஇ, சிஎஸ்இ ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் ஆர்.நித்திஷா, ஆர்.பி.ஸ்ரீநாத், கோகுல்சண்முகம், என்.ராம்விக்ணேஷ், இ.விக்ணேஷ் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகிய மாணவர்கள் முதல் பரிசுகளை பெற்றனர்.
வெற்றிபெற்றோர்க்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஸ்வர்தா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.