ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அறிவியல் திருவிழாவில் முதல் பரிசு வென்றனர்


தில்லியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். 

ஸ்வச்பாரத் மற்றும் ஸ்டேடர்ஜிக் அப்லிகேசன் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் இப்பரிசினை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான்பாரதி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்தியது. இதில் 3000 இளம் விஞ்ஞானிகள், 300 கல்வி சார் துறையினர், 200 தொழில் துறையினர் என பலர் பங்கேற்றனர்.

மாணவர்கள், ஸ்வச் பாரத், பசுமை ஆற்றல், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட்டனர். இதில் மொத்தமாக மாணவர்களிடம் இருந்து 1300 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இஐஇ, இசிஎஸ், இஇஇ, சிஎஸ்இ ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் ஆர்.நித்திஷா, ஆர்.பி.ஸ்ரீநாத், கோகுல்சண்முகம், என்.ராம்விக்ணேஷ், இ.விக்ணேஷ் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகிய மாணவர்கள் முதல் பரிசுகளை பெற்றனர்.

வெற்றிபெற்றோர்க்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஸ்வர்தா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...