கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஏசுகிறிஸ்து வாழ்க்கை வரலாறு குறித்து அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் நாடகம் நடத்தினர்


கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதில், ஏசு பிறப்பு உள்ளிட்ட அவரது வாழ்க்கை குறித்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் தத்ரூபமான நாடகம் அங்கிருந்தோரை வெகுவாக கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் ஷேர்லி தாமஸ் வரவேற்புரையாற்றினார். அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழா என்பது சாதிமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படுகின்ற விழாவாக அமைகின்றது. அறியாமை, மூடநம்பிக்கை, பேராசை, வெறுப்புணர்ச்சி போன்றவைகளை அகற்றுவதற்காக தெய்வ அவதாரமாகிய ஏசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார் என்றும், உலகம் முழுவதும் ஆன்மீக ஒளியை பரப்புவதற்காக கிறிஸ்துமஸ் விழா இசை நிகழ்ச்சிகளுடன் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, கோவை இன்டச் ஃபெல்லோசிப் இன்டர்நேசனல் முதன்மை பாஸ்டர் எம்.அருமைநாயகம் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்களின் ஏசுபிறப்பு நாடகம் தத்ரூபமாகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார். நிறைவாக பேராசிரியர் முனைவர் வசந்தகல்யாணி நன்றியுரை வழங்கினார்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...