பெண்களுக்கு ஏற்படும் எலும்பு, மூட்டு பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி? ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் டாக்டர். R. விஜயராஜ் விளக்கம்.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூட்டு, நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். R. விஜயராஜ் அவர்களின் சில ஆலோசனைகள்

மூட்டுவாதம் (ஆர்த்ரைடிஸ்) 

காண்ட்ரோமலசியா படெல்லா எனப்படும் முழங்கால் வலி முப்பது முதல் நாற்பது வயதுள்ள பெண்களுக்கு காணப்படும். முழங்கால் மூட்டு சிப்பி எழும்பின் உள்பாகத்தில் உள்ள எலும்பு ஜவ்வு மிருதுவாகி மூட்டில் அழுத்தம் அதிகமாகின்றபோது வலியை உண்டாக்கும். 



மாடிப்படி ஏறி இறங்கும்போதும், உட்கார்ந்த நிலையிலிருந்து எழும்போதும் முழங்கால் வலி அதிகரிக்கும். மூட்டு பயிற்சிகள் மற்றும் எடை குறைப்பு செய்வது உதவும். காயமில்லா நுண் துளை மூட்டு ஜவ்வு (கார்டிலேஜ்) சிகிச்சை மூலம் வலியிலிருந்து தீர்வு பெறலாம். மூட்டு வலிக்கான மாத்திரைகள் நிரந்தர தீர்வு அளிப்பதில்லை. ஆரம்பகால மூட்டுதேய்மானத்திற்கு பிசியோதெரபி, மூட்டு ஊசி மற்றும் ஆர்த்ரோஸ்கோபி எனப்படும் நுண் துளை சிகிச்சை பலனளிக்கும். வலியிலிருந்து நிரந்தர நிவாரணம் பெற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உதவும்

தோள்பட்டை வலி



கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, தசைநார் பலவீனம் மற்றும் தூங்கும்போது தோள்பட்டையில் வலி உள்ளவர்கள் தோள்பட்டை ஊசி, சிறப்பு பயிற்சிகள்  மற்றும் காயமில்லா நுண் துளை சிகிச்சையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம், தோள்பட்டையின் முழு செயல்பாடு பெற முடியும்.

எலும்பு, மூட்டு தேய்மானம்

ஆண்களைவிட, பெண்களுக்கு இயல்பாகவே எலும்புகள் சிறியதாகவும், மெலிதாகவும் உள்ளதுபோல் மூட்டு ஜவ்வு (கார்டிலேஜ்) தடிமனும் குறைவாகவே இருக்கும். இதனால் பெண்களுக்கு எலும்பு, மூட்டு தேய்மானத்திற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு புரை நோய் நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு காணப்படும். 



இதனால் எலும்பு பலவீனமடைந்து எலும்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வளைவு  மற்றும் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும். கால்சியம், வைட்டமின்-D  நிறைந்த உணவு வகைகள், தினமும் முப்பது நிமிடம் உடற்பயிற்சிகள், மருத்துவர் ஆலோசனை, மருந்துகள் மூலம் எலும்புகளை வலிமையாக்க இயலும்.

குதிகால் வலி

காலையில் உறங்கி எழுந்தவுடன் நடக்கும்போது “ப்ளாண்டர் பேச்சிடிஸ்” எனப்படும் உபாதை உள்ளவர்களுக்கு குதிகால் வலி அதிகமாக இருக்கும். குதிகால் ஊசி, சிறப்பு பயிற்சிகள் மற்றும் மென்மையான காலணிகள் அணிவதன் மூலம் வலி நிவாரணம் பெறலாம்.

இளம்பெண்கள் உயர்ந்த குதிகால் காலணிகள் அணிவது தற்போது பரவலாக உள்ளது. இதனால் மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து பாதம், முழங்கால், இடுப்பு மற்றும் முதுகு மூட்டு தேய்மானம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற உயர்ந்த குதிகால் காலணிகளை தவிர்ப்பது நல்லது.

பாத வலி 

தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு பாத வலி, மூட்டு வலி மற்றும் மூட்டு தேய்மானம் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. மருத்துவ ஆலோசனை, சிறப்பு பயிற்சிகள் மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள் அணிவதன் மூலம் பாதம், கணுக்கால், முழங்கால் மூட்டு வலி வராமல் தவிர்க்கலாம்.

மூட்டு தசைவலி

பெண்கள் மாதவிடாய் முடிந்த முதல் வாரத்தில் ஹார்மோன்களின் சமநிலை மாறுவதால், மூட்டு சுற்றியுள்ள தசைநார்கள் மென்மையாகவும் பலவீனமாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் தசைநார்கள் சேதமடைவதை தடுக்க விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவது முக்கியம். 

மூட்டுகளுக்கு அதரவு தரும் பாண்டேஜுகள் அணிவது நல்லது. விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மருத்துவ ஆலோசனை மூலம் சிறப்பு பயிற்சிகள் பெற்று மூட்டு சுற்றியுள்ள தசைகளை வலிமையாக்க இயலும். விளையாட்டுகளின் போது சேதமடையும் குறிப்பிட்ட தசைநார்கள் முழுவதுமாக ஆறுவதில்லை. நுண் துளை தசைநார் புணரமைப்பு சிகிச்சைக்கு பின்பு மீண்டும்  விளையாட்டுகளில் தொந்தரவின்றி கலந்துகொள்ள இயலும். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...