தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றை துவங்கி அவர்களுக்கு காலதாமதமின்றி பயிர்க் கடன் வழங்க அரசாணை உள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் பெற்றிருந்த 16067 சிறுகுறு விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை ரூ.88.83 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 3519 விவசாயிகள் ரூ.27.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் பெற்று பயணடைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளும் தமிழக அரசின் சிறப்பு பயிர்க்கடன் திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
பயிர்கடன் தள்ளுபடி பெறாத இதர விவசாயிகளும் ஏற்கனவே பெற்ற பயிர்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி புதிய பயிர்க்கடன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறாத தகுதியுள்ள விவசாயிகள் இருப்பின் அவர்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் பெற்றிருந்த 16067 சிறுகுறு விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை ரூ.88.83 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 3519 விவசாயிகள் ரூ.27.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் பெற்று பயணடைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளும் தமிழக அரசின் சிறப்பு பயிர்க்கடன் திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
பயிர்கடன் தள்ளுபடி பெறாத இதர விவசாயிகளும் ஏற்கனவே பெற்ற பயிர்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி புதிய பயிர்க்கடன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறாத தகுதியுள்ள விவசாயிகள் இருப்பின் அவர்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.