தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றை துவங்கி அவர்களுக்கு காலதாமதமின்றி பயிர்க் கடன் வழங்க அரசாணை உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் பெற்றிருந்த 16067 சிறுகுறு விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை ரூ.88.83 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 3519 விவசாயிகள் ரூ.27.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் பெற்று பயணடைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளும் தமிழக அரசின் சிறப்பு பயிர்க்கடன் திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

பயிர்கடன் தள்ளுபடி பெறாத இதர விவசாயிகளும் ஏற்கனவே பெற்ற பயிர்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி புதிய பயிர்க்கடன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறாத தகுதியுள்ள விவசாயிகள் இருப்பின் அவர்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...