கோவை மாநகராட்சி நிர்வாகமும், கற்பகம் கல்விக் குழுமமும் இணைந்து ஸ்வச்சதா செயலி, ஸ்வச் சர்வேக்ஷன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகிக்க கற்பகம் கல்விக் குழுமத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கையில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 குறித்து பதாகைகளை ஏந்தியவாறு ஸ்வச்சதா செயலி, ஸ்வச் சர்வேக்ஷன், திறந்த நிலை கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

