கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 96-வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் உள்ள நம்ம டாய்லெட்-ஐ மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சுந்தராபுரம், முருகா நகர், பெரியசாமி சேவா விதி ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிப்பிடத்தையும், 98-வது வார்டுக்குட்பட்ட எல்ஐசி காலனியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, முருகா நகர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன கடையில் தேவையில்லாத டயர்களை அகற்றும் படி பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த அதனை உரிமையாளர் அகற்றாததால், ஒரு லோடு டயர்களை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டதை அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சுந்தராபுரம், முருகா நகர், பெரியசாமி சேவா விதி ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிப்பிடத்தையும், 98-வது வார்டுக்குட்பட்ட எல்ஐசி காலனியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, முருகா நகர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன கடையில் தேவையில்லாத டயர்களை அகற்றும் படி பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த அதனை உரிமையாளர் அகற்றாததால், ஒரு லோடு டயர்களை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டதை அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.