கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கோவை ஷாப்பிங் திருவிழா துவக்கம்


கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் திறந்து வைத்தார்.

 

கொடிசியா வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், உடைகள், தொழில்நுட்பப் பொருட்கள் என ஏராளமானவை இடம்பெற்றுள்ளன.



இதில், மும்பையைச் சேர்ந்த சரத் மிஸ்ராவின் ஒரு கலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலைக் கூடம் 6 ஆண்டுகளாக கொடிசியா வளாகத்தில் நடைபெரும் ஷாப்பிங் திருவிழாவிலும் இடம் பெற்றுவருகிறது. அவரது அரங்கில் மும்பையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வளை கூடைகள், சுவர் அலங்காரப் பொருட்கள், சிலைகள் என பல கைவினைப் பொருட்கள் மக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் உள்ளன.



அக்கண்காட்சியில், யுனிவர்சல் லைட்ஸ் சேர்ந்த மணிகண்டன் அவர்களின் கண்காட்சிப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. இவர் இக்கண்காட்சியில் பங்குபெருவது இது இரண்டாவது முறையாகும். இந்த அரங்கில், வண்ண விளக்குகள், அலங்கார விளக்குகள் என ஏராளமானவை உள்ளன. மேலும், மக்களின் விருப்பத்திற்கு தகுந்தவாரும் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 250 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையுள்ள மின்சார சேமிப்பு மின் விளக்கு, எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை இங்கு அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. 



கோவை ஷாப்பிங் திருவிழாவில் முதன்முறையாக கோயம்புத்தூர் நியாடா கிரியேஷனில் இருந்து ஷீலா மேத்யூஸ் என்பவர் பங்கேற்றுள்ளார். இவரது கண்காட்சி அரங்கில் வீட்டின் அழகை மெருகேற்றும் அலங்காரப் பொருட்கள், சுவற்றில் அழகுக்காக தொங்கவிடப்படும் பொருட்கள், திரைச் சீலைகள் என பலப் பொருட்கள் கண்காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் இடம்பெற்றுள்ளன.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...