தமிழக தலைமை செயலர் வீட்டில் சோதனையிட்டதற்கு ஏன் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ? என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கேள்வி


தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததற்கு தமிழக முதல்வரும், எதிர்க் கட்சி தலைவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மம்தா ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க -வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசுகையில்,

தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஏன் வருமான வரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்கள் தான் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சசிகலா-வை சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு!. இந்த அணுகுமுறை ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல என கூறினார். 

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டதாக கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...