மும்பையில் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இந்த நினைவிடத்தில் சத்ரபதி சிவாஜி குதிரை மீது வீற்றிருக்கும் படியான சிலை 192 மீட்டர் உயரத்தில் அமைய உள்ளது.

இது கட்டி முடிக்கும் போது உலகின் மிக உயர்ந்த சிலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நினைவிடம் கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் 15.96 ஹெக்டர் நிலபரப்பில் அமைய உள்ளது. இந்த நினைவிடத்தை கட்டி முடிக்க, மாநில அரசு 3,600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி,'தைரியம், துணிச்சல் மற்றும் நல்ல அரசால்கைக்கு சத்ரபதி சிவாஜி ஒரு முன்னுதாரணம். இந்த நினைவிடத்தை அமைப்பது அவருக்கான சிறப்பான அஞ்சலியாக இருக்கும். நினைவிடத்துக்கு நான் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.' என்று கூறினார்.