மருத்துவ படிப்பிற்க்காக டெல்லி சென்று மர்மமான முறையில் உயிரிழந்த சரவணன் பெற்றோர் கோவையில் பேட்டி


மருத்துவ படிப்பிற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மர்மமான முறையில் உயிரிழந்த சரவணனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மருத்துவ மேல்படிப்பிற்காக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கு சென்ற அவரது பெற்றோர்கள் சரவணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வந்த நிலையில் சரவணன் பிரேத பரிசோதனை முடிவில் திட்டமிட்டே சரவணனுக்கு கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். 

அதேப் போல் திட்டமிட்டு தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சரவணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் உயிரிழப்பிற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

சரவணன் கொலையில் டெல்லி காவல்துறைக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், விரைவில் புதிய தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...