கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் ஆண் யானை இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த காட்டு யானையை சோதனையிட்டனர்.
தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், தற்போது மதுக்கரை வனப்பகுதியில் உரியிழந்திருப்பது ஆண் காட்டு யானை, சுமார் 20 வயதிருக்கும். இந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் எனப்படும் கிருமித் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு கிருமிதொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
மேலும், இப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கால்நடை விலங்குகளுக்கு தடுப்பூசி, சுற்றுப்புரத்தில் சுகாதாரத்தைபேனுதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், தற்போது மதுக்கரை வனப்பகுதியில் உரியிழந்திருப்பது ஆண் காட்டு யானை, சுமார் 20 வயதிருக்கும். இந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் எனப்படும் கிருமித் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு கிருமிதொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
மேலும், இப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கால்நடை விலங்குகளுக்கு தடுப்பூசி, சுற்றுப்புரத்தில் சுகாதாரத்தைபேனுதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.