கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மாணவர்கள் இணைந்து இன்று கிறிஸ்துமஸ் தினத்தினை ஆதரவற்றோர், முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் கொண்டாடினர்.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி துறையின் மாணவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக்குகளை தயாரித்து அதனை ஆதரவற்றோர் இல்லங்களில் வழங்கி கிறிஸ்துமஸ் தினத்தினை கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இவ்வருடம், கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு கோவைபுதூரில் அமைந்துள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் சில்ரன் என்னும் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திலும், மற்றும் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள செசிர் ஹோம் (Cheshire) உள்ளிட்ட இடங்களில் தாங்கள் தயாரித்த கேக்குகளை கொடுத்து கொண்டாடினர்.

மேலும், அதன் ஒருபகுதியாக சமையல் அறிவியல் துறையின் சார்பாக ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் வளாகத்தில் கேக்குகள் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் உள்ளிட்டு ஆசிரியர்கள் சதிஷ்குமார், அர்ஜுனன், ரதிகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி துறையின் மாணவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக்குகளை தயாரித்து அதனை ஆதரவற்றோர் இல்லங்களில் வழங்கி கிறிஸ்துமஸ் தினத்தினை கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இவ்வருடம், கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு கோவைபுதூரில் அமைந்துள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் சில்ரன் என்னும் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திலும், மற்றும் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள செசிர் ஹோம் (Cheshire) உள்ளிட்ட இடங்களில் தாங்கள் தயாரித்த கேக்குகளை கொடுத்து கொண்டாடினர்.

மேலும், அதன் ஒருபகுதியாக சமையல் அறிவியல் துறையின் சார்பாக ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் வளாகத்தில் கேக்குகள் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் உள்ளிட்டு ஆசிரியர்கள் சதிஷ்குமார், அர்ஜுனன், ரதிகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.