பர்கூர் வனச்சரகம், தென்பர்கூர் காப்புக்காடு பேரதட்டைப்பள்ளம் சரகத்தில் வனத்துறை தனிக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் பி.ஜி.அருண்லாலின் (பொ) உத்தரவின்படி, இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன், யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி இரண்டு தந்தங்களும் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து, பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில், இறந்த ஆண் யானைக்கு சுமார் 6 வயது இருக்கும். இந்த யானை வயிற்றுப்புண் காரணமாக இறந்துள்ளது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.