தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:-
மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களை புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களாக அறிவிப்பதுடன், அவசியமான நிவாரண திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
விவசாய பாதிப்பால் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும். பயிர் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். நிலுவையிலுள்ள பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலக் குழு பொருளாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், தமிழ்நாடு மாநில விவசாயத் தொழிலாளர் சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் சுப்பையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:-
மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களை புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களாக அறிவிப்பதுடன், அவசியமான நிவாரண திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
விவசாய பாதிப்பால் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும். பயிர் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். நிலுவையிலுள்ள பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலக் குழு பொருளாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், தமிழ்நாடு மாநில விவசாயத் தொழிலாளர் சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் சுப்பையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.