நவஇந்தியாவில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய கிராஜிவிட்டியினை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நவஇந்தியாவில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக கிராஜிவிட்டி வழங்கப்படாததால் உடனடியாக அதனை பெற்றுத தரக் கோரி நவஇந்தியா ஆர்.கே.ஐ- ஆர்.வி.எஸ் தொழிலாளர் கிராஜிவிட்டி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பு.வெ.கோபால், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நவஇந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் இதுநாள் வரை வழங்க வேண்டிய 50 சதவிகித கிராஜிவிட்டி வழங்கவில்லை. தொழிலாளர் உதவி ஆணையரிடம் 2014 ஜூலை 15ம் தேதியன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடைபெறவில்லை. 

மேலும், 285 தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர் கிராஜிவிட்டி கட்டுப்பாடு அதிகாரி முன் நடந்த விசாரணையில் 30 நாட்களுக்குள் கிராஜிவிட்டி வழங்க உத்தரவிட்டும் தற்போது வரை அது வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, கிராஜிவிட்டி சட்டப்படி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக கிராஜிவிட்டு பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...