ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் கோவை மாவட்டத் தலைவர் வி.வி.மாணிக்கம், தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுக்கு தடைசெய்யும் வகையிலும், நாட்டு, பாரம்பரிய இனங்களை அழிக்கும் வகையிலும் பீட்டா என்னும் பிராணிகள் வதை அமைப்பு தொடர்ந்த வழக்கினால் மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.
உடனடியாக, ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுக்கு தடைசெய்யும் வகையிலும், நாட்டு, பாரம்பரிய இனங்களை அழிக்கும் வகையிலும் பீட்டா என்னும் பிராணிகள் வதை அமைப்பு தொடர்ந்த வழக்கினால் மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.
உடனடியாக, ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.