பேய்கள் நடமாடும் நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனத்தை தடுக்க ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் மனு

பேய்கள் நடமாடும் இரவு 12 மணி நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனம் செய்வதை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் என்கிற வினோத் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



"வருகிற டிசம்பர் 31-ஆம் தேதியன்று இரவு புத்தாண்டு என்கின்ற பெயரில் அன்று இரவு கேளிக்கை விடுதிகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாலை விபத்துகளை ஏற்படுத்துவோர் மீதும், இதன் மூலம் கலாச்சார சீரழிவு செய்துவரும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு முடக்க வேண்டும்.

இந்து ஆகம விதிப்படி இரவு 12 மணி நேரத்தில் பேய்கள் நடமாடும் நேரத்தில் புத்தாண்டு தரிசனம் என்கிற பெயரில் தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஒரு சில கோவில்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அந்த நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது, அது நம் அழிவிற்கு காரணமாக அமையும். அதனால், இதுபோன்ற இந்து விரோத செயல்களை தடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...