தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பிக்கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் தகவல்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பிக்கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மனித உரிமை பாதுகாப்பு மாநாடு ஜனவரி 7-ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அதில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை வரவேற்பதாகவும், இது போன்ற சோதனைகள் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக பிரதமர் இதை செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் 11 பேர் நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை எனவும், இதை போல அரசு வழகறிஞர்கள் நியமனம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பணி நியமனங்கள் நியமனம் செய்யும் போது  ஆளும் கட்சி உறுப்பினர்களாக இல்லாமல் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் புதிதாக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட 83 பேர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் பல்கலைக் கழகம் அவர்களது இணைய தளத்தில் பணி நியமனம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களை  நேரில் சென்று சந்திப்பது தவறானது எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உள்ளிட்ட உடைமைகளை திருப்பிக்கொடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...