கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 28 மற்றும் 31-வது வார்டு, சரவணம்பட்டி பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சரவணம்பட்டி கார்த்திக் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடத்தையும், குமரன் நகர் பகுதியில் உள்ள நம்ம டாய்லெட்டையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, சரவணம்பட்டி கார்த்திக் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடத்தையும், குமரன் நகர் பகுதியில் உள்ள நம்ம டாய்லெட்டையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.