குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தபடுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி இந்திரா நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை கடலைகார சந்து 72 வார்டு இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 40கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் தாங்கள்  இந்திரா நகர் பகுதியில் ரயில்வே சந்திப்பின் பின்புறம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு சிட்டா,பீமா ரசீது,மின் இணைப்பு  என அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களாக ரயில்வே நிர்வாகம் விரிவாக்கத்திற்காக  காலி செய்ய நிர்பந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறியவர்கள் இங்கு வசிப்பவர்கள் தாங்கள் சாதாரண தினகூலி மற்றும் நடைபாதை வியாபாரிகள் எனவும் உடனடியாக காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்திப்பதால் தங்களால் மாற்று வீட்டிற்கு முன்தொகை வழங்கமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...