கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்வச்சதா செயலியினை கைபேசியில் நிறுவும் விழா மற்றும் அதுகுறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.
இதில், ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் விஎல்பி கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இதில், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச்பாரத் குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் வகையில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாணவர்களின் தூய்மை இந்தியா மீதான பங்களிப்பினை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், ஆர்ஏஏசி தன்னார்வ அமைப்பினர், ஆர்க் பவுண்டேஷன் ஸ்வச் வுமன் வொன்டர் மற்றும் ஸ்வச்பாரத் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இதேப்போன்ற ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.