கோவை கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும், தாய்மார்கள் வேண்டுகோள்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் நடைபெரும் நாளில் பெண்கள், குழந்தைகள் உட்பட வயதானவர்களும் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அரசிடம் கொடுப்பர்.

தங்கள் மனு மீதான அரசின் நிலைப்பாடுகளை பொறுத்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபடுவர். இது போன்ற நேரங்களில், தங்கள் மனு உரிய அதிகாரிகளிடம் சென்று, அவர்களிடம் இருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வரும் வரையில் கால்கடுக்க காத்திருப்பர். இதில் கர்பிணிகளும், கைக்குழந்தைகளோடு வரும் பெண்களும் அடங்குவர்.



இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கதறி அழுத தன் கைக்குழந்தைக்கு பாலூட்ட இடம் கிடைக்காமல் அலைந்தார். பின்னர், அவ்வளாகத்தின் வெளியில் இருந்த ஏடிஎம் மையம் அருகில் சென்று அந்த பிள்ளைக்கு பாலூட்டினார். இந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை சற்றே உறுத்தியது.

மனு அளிக்க மட்டுமன்றி பல்வேறு அரசு அலுவல்கள் காரணமாக ஏராளமான தாய்மார்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...