மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அதிக கட்டணம் வசூலித்த நவீன கட்டண கழிப்பிட குத்தகைதாரர்க்கு அபராதம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட அரசு பொது மருத்துவமணை எதிரில் செயல்பட்டு வரும் நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் தலைமையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 73-வது வார்டு திருச்சி சாலை, அரசு பொது மருத்துவமணை எதிரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, குத்தகைதாரர் வி.கே.ரஹமதுல்லா என்பவரின் வசூல் செய்யும் பணியாளர்கள் ஏல விதிமுறைப்படி மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தின் ரூ.1 கட்டணம் வசூல் செய்யாமல், அதற்கு பதிலாக ரூ.3 கூடுதல் கட்டணம் வசூல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, மாநகராட்சி பொது ஏல விதிமுறைகளை மீறி செயல்பட்ட குத்தகைதாரர் வி.கே.ரஹமதுல்லா என்பவரை இறுதியாக எச்சரிக்கை செய்து, அபராதத் தொகையாக ரூ.10,000 விதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...