காந்திபுரம் 51வது வார்டு பகுதியில் அ.தி.மு.க சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌவுன ஊர்வலம் காந்திபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் அம்மன் கே.அர்ஜுனன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டது.

51வது வட்ட கழக செயலாளர் மற்றும் கல்வி, விளையாட்டு, பூங்கா குழு உறுப்பினர் எஸ்.ஜே அசோக் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காந்திபுரம் பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, காந்திபுரம் பகுதி கழக செயலாளர் வக்கீல் ராஜன், அ.தி.மு.க கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

51வது வட்ட கழக செயலாளர் மற்றும் கல்வி, விளையாட்டு, பூங்கா குழு உறுப்பினர் எஸ்.ஜே அசோக் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காந்திபுரம் பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, காந்திபுரம் பகுதி கழக செயலாளர் வக்கீல் ராஜன், அ.தி.மு.க கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.