அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் சசிகலா படத்தின் மீது சாணி வீசியதால் பரபரப்பு


அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியினர் வரவேற்பு தந்துவரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

அந்த போஸ்டரில் சசிகலா புகைப்படம் இருந்துள்ளது. இதைக்கண்டு கோபமுற்ற அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் புஷ்பா என்பவர் மாட்டு சாணத்தை வீசியுள்ளார்.



இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல் துறையினர் அதனை அப்புறப்படுத்தி போஸ்டரை கிழித்து எறிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை கொன்ற சசிகலா வரக்கூடாது என்பதற்காகத்தான் போஸ்டரில் மாட்டுச்சாணத்தை வீசியதாகவும், அம்மாவின் வாரிசான தீபா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக வந்தால் தாம் வரவேற்பதாகவும், எக்காரணத்தைக்கொண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக வரவிடக்கூடாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...