கோவையை சேர்ந்த பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் மீது மோசடி, நம்பிக்கை மோசடி என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி கவுண்டர். விவசாயியான இவர் தனது மகள் ஞானசௌந்தரியை கடந்த 2009 ஆம் ஆண்டு பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஞானசௌந்தரி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே மகளின் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் நகைகளை திருப்பி வழங்குமாறு சுந்தரசாமி கவுண்டர் முருகானந்தத்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், அதற்கு முருகானந்தம் உரிய பதிலளிக்காததால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அலைகழிக்கப்பட்டதால் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுந்தரசாமி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம், அவரது தந்தை பழனிசாமி கவுண்டர், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக பாதிக்கப்பட்ட சுந்தரசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி கவுண்டர். விவசாயியான இவர் தனது மகள் ஞானசௌந்தரியை கடந்த 2009 ஆம் ஆண்டு பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஞானசௌந்தரி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே மகளின் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் நகைகளை திருப்பி வழங்குமாறு சுந்தரசாமி கவுண்டர் முருகானந்தத்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், அதற்கு முருகானந்தம் உரிய பதிலளிக்காததால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அலைகழிக்கப்பட்டதால் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுந்தரசாமி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம், அவரது தந்தை பழனிசாமி கவுண்டர், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக பாதிக்கப்பட்ட சுந்தரசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.