இந்திய அளவிலான சாம்பியன்ஸ்ஷிப் ஹாக்கி போட்டியில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட குன்னூர் இளைஞர்கள்

குன்னூரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பிரசாத் (21) ஆகிய இருவரும் ஹாக்கி இந்தியா-வால் இந்திய அளவில் நடைபெறவுள்ள ஹாக்கி 7-வது சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது, வரும் 2017 ஜனவரி 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நீலகிரி ஹாக்கி அசோசியேசன் தலைவர் எஸ்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:- "கடந்த 2000-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோரை இதற்காக தயார்படுத்தி வருகிறோம். அவர்கள் கடந்த 2 வருடமாக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளனர்" என்றார்.

நீலகிரி ஹாக்கி அசோசியேசன் செயலாளர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:- "ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோர் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது கவனம் முழுவதையம் ஹாக்கியில் மட்டுமே செலுத்தி தற்போது இந்திய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...