சிட்டிசன் வாய்ஸ் கிளப்-யின் தலைவர் சி.ஜெயராமன் மற்றும் செயலாளர் வி.ஏ.சண்முகம் ஆகியோர் இன்று கோவை மாவட்ட மின்சாரத் துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
மின் கம்பிகளில் உள்ள மின் இணைப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செல்போன் கோபுரங்கள் மழை, புயலால் சரிந்துவிடாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு அதற்கு துணை அமைக்க வேண்டும். மேலும், செல்போன் கோபுரங்கள் மின்சார இணைப்புகள் அருகில் இல்லாதவாரு அமைக்க வேண்டும்.
மின்சாரத் துறை சார்பில் மின்சாரக் கட்டணம் செலுத்த பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் உள்ளிட்ட வங்கி கணக்கு அட்டையினைக் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மின்சாரக் கம்பிகளிலும் அடையாள எண்களை எழுத வேண்டும். இதன் மூலம் ஏதேனும் புகார் அளிக்க வசதியாக இருக்கும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.