கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறும் விதமாக வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 30 ம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில், படிக்காதவர்கள், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்பளமோ உள்ளிட்ட கல்விகள் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் கல்வியறிவுடையவர்கள் என அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம்.
இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர், வேலையளிப்போருக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், இதன் மூலம் வேலைபெரும் மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இதில் பங்கேற்று வேலை பெற்று மாற்றுத்திறனாளர்கள் பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில், படிக்காதவர்கள், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்பளமோ உள்ளிட்ட கல்விகள் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் கல்வியறிவுடையவர்கள் என அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம்.
இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர், வேலையளிப்போருக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், இதன் மூலம் வேலைபெரும் மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இதில் பங்கேற்று வேலை பெற்று மாற்றுத்திறனாளர்கள் பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.