டெங்கு காய்ச்சலால் ஒரு வயது பெண் குழந்தை பலி


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற ஒரு வயது குழந்தைக்கு கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து, அந்த மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் கடந்த 24ம் தேதி கீர்த்தனா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25ம் தேதி அதிகாலை பறிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து வழக்குப்பதிந்த பந்தய சாலை போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. அதில், கீர்த்தனாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததும். அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. 

கடந்த ஒரு மாதகாலமாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை பீதியடையச்செய்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...