திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற ஒரு வயது குழந்தைக்கு கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து, அந்த மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் கடந்த 24ம் தேதி கீர்த்தனா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25ம் தேதி அதிகாலை பறிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிந்த பந்தய சாலை போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. அதில், கீர்த்தனாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததும். அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை பீதியடையச்செய்துள்ளது.