தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 2017 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது.
பயிற்சி வகைகள்
1. மசாலா பொடிகள்
2. தயார்நிலை பேஸ்ட்
3. காளான் ஊறுகாய்
4. வாழைப்பூ ஊறுகாய்
5. பாகற்காய் ஊறுகாய்
6. கத்தரிக்காய் ஊறுகாய்
7. வெங்காய ஊறுகாய்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரைப் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள் பயிற்சி கட்டணத் தொகையை வரைஓலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் வரைவோலை எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்து, மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள் 0422-6611340 அல்லது 6611268 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.