ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு மரங்கள்


மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் அரசு பொது இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய புங்கமரங்களை அகற்றுவது குறித்து ஓசை அமைப்பின் சையது-விற்கு மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஓசை மற்றும் பசுமை தேசம் தன்னார்வலர் அமைப்பின் சையது மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அந்த மரங்களை வேருடன் அகற்றி கோவைபுதூரில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடவு செய்தனர்.



இதுகுறித்து ஓசை சையது நமது நிருபரிடம் கூறியதாவது:-

மாநகராட்சி பொது இடத்தில் இருந்த மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி தன்னார்வ அமைப்பினரை தொடர்பு கொண்டிருப்பது இதுவே முதன் முறை. சமீபத்தில் பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் பல்வேறு இடங்களில் நடப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலர்களை ஊக்குவித்துள்ளது" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...