கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை 04.01.2017 அன்று காலை 9 மணிக்கு நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனவே, இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனவே, இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.