எஸ்.என்.ஆர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை 04.01.2017 அன்று காலை 9 மணிக்கு நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.  

எனவே, இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...