வேளாண் பல்கலையில் வளங்குன்றா வேளாண்மையில் நுண்ணுயிர்கள் குறித்து கலந்துரையாடல்

சர்வதேச பயறு வகை பயிர்களுக்கான ஆண்டின் (2016) முக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக, “வளங்குன்ற வேளாண்மையில் நுண்ணுயிர்கள் - உழவர்கள் சிறப்பு கலந்துரையாடல்” தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கலிருந்தும், 75 உழவர் பெருமக்களும், தமிழக அரசின் வேளாண் துறையில் நுண்ணுயிர் உர உற்பத்தி ஆய்வகத்தில் பணியாற்றும் வேளாண் அலுவர்களும் பங்கேற்றனர்.  



இவ்விழாவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராமசாமி தலைமையேற்று துவைக்கி வைத்தார். தனது துவக்க உறையில்; பயிறுகளின் முக்கியத்துவம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில் நுட்பங்கள், வேளாண் விரிவாக்க செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் உழவர்களும் மாணவர்களும் இப்பல்கலைகழகத்தின் இருகண்கள் என உழவர்களை முன்னிருத்தி தனது துவக்க உரையாற்றினார். 



பிலிப் விரிவாக்கக் கல்வி இயக்குனர் வாழ்த்துரை வழங்கினார். நவீன உயிர் உர உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பயிறுவகை பயிர்களுக்கான செறிவூட்டப்பட்ட ரைசோபிய உயிர் உரம் அறிமுகம் படுத்தப்பட்டு, விதை நேர்த்தி, அதை செய்யும் முறை பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன உயிர் உரஉற்பத்தி ஆய்வகத்தை நேரில் கண்டு பார்வையிட்டனர்.  இவ்விழாவில் நவீன உயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் வெளியிடப்பட்டது.

இயற்கை வள மேம்பாட்டு இயக்குனரக தனி அலுவலர் குமார் வரவேற்றார். வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் மாரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...