கோவை பெரியகாடை வீதியை அடுத்த முத்துவிநாயகர் கோவில் வீதியில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருபவர்கள் சாதிக் கரம்சேட் மற்றும் இவரது மகன் அர்ஜுன்சேட்.

இந்நிலையில், இன்று இவர்களது தங்க மொத்த வியாபாரக் கடையிலும், வைசியாள் வீதியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அப்பகுதியில் வருமான வரித்துறையினரின் கார் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் அங்கு வந்த வருமான வரித்துறையினர் காரில் இருந்து மூன்று அதிகாரிகள் அவர்களது கடைக்குள் சென்றதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியல் காவல் துறையினர், செய்தியாளர்கள் குவிந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.