எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் “சிகரங்களை நோக்கி” தன்னம்பிக்கை பயிலரங்கம்


கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...