பெரியநாயக்கன்பாளையத்தில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது


கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேரை கைது செய்துள்ள வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 6 நாட்டு வெடிக்குண்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நாட்டு வெடிகுண்டு வெடித்து காயமடைந்த காட்டு யானையையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பாரதிநகர் பகுதியில் அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவுட்டுக்காயை கடித்து அது வெடித்ததில் காட்டு யானை படுகாயமடைந்து உணவு உண்ணமுடியாமல் தவித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் வேட்டையாடுபவர்களை பிடிப்பதற்காகவும் கோவனூர் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது இறந்த காட்டுப்பன்றியின் உடலுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ், குருசாமி, குமார் மற்றும் முத்துகுமார் என்ற கூலித் தொழிலாளிகள் என்பதும் அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடியை பயன்படுத்தி காட்டுப் பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. 

மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்திய வெடிக்காத 6 நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தது. அவர்களிடம் இருந்து பன்றி மட்டும் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து 4 பேரையும் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். நாட்டு வெடி வைத்திருந்தது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபப்பட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அடிப்பட்ட யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் தேடி வருகின்றனர். இது போன்று நாட்டு வெடிகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...