மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அடையாள அட்டைகளை வழங்கினார்


கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

 

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசுகையில்; “கோயம்புத்தூர் வெள்ளளுர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றார்கள். மேலும் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றார்கள், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களை கணக்கெடுப்பு நடத்தி ஒருங்கிணைத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் திடக்கழிவு மேலாண்மையின் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், உயர்ந்த மதிப்பான குப்பை பொருட்களை மட்டும் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய வருமானத்தை உயர்த்தும் வகையில் குறைந்த மதிப்புள்ள குப்பை பொருட்களையும் சேகரித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையிடம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

 

மேலும் அடுத்த கட்டமாக குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் அனைவருக்கும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சியும், மருத்துவ சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...