கோவையில் நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் இசை நிகழ்ச்சி!

இந்தியன் ரெட் கிராஸ் சோசைட்டி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வெல்ஃபேர் அசோஷியேஷன் இனைந்து கோவையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான தொகையீட்டும் வகையில் நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'தனா' ரத்த வங்கி மற்றும் 'ஆதரவு' என்ற மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக 'தரங்கி' என்னும் இசை நிகழ்ச்சி ஜனவரி 2ம் தேதி அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் சங்கர் மஹாதேவன் மற்றும் சிவமணி இனைந்து மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியை விஜய் டிவி பேச்சாளர் பாவனா தொகுத்து வழங்க உள்ளார்.



இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை  பெற்றுக்கொள்ள அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் சந்திரா ஹூண்டாய் ஷோரூம்கள், கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களிலும் இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச்சீட்டு ரூபாய் 250 முதல் 10,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7397044999 மற்றும் 7397770555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...