பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, 50 நாட்களில் பிரச்சனைக்கள் தீர்க்கப்படும் எனக்கூறி இருந்தது ஆனால் ஐம்பது நாட்கள் கடந்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், பிரதமர் மோடியின் வாக்குறுதி பொய்யாகி விட்டாதகவும் கூறி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடன் நிலுவை வைத்திருக்கும் கார்பெரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் மைக்கை பிடுங்கியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் மற்ற கட்சிகள் பிளகஸ் பேனர்கள் வைத்தாலும் காவல்துறை கண்டுகொள்வதில்லை எனவும்,மக்களுக்காக போராடும் கட்சிகளிடம் மட்டுமே காவல்துறை அடக்குமுறைகளை கையாளுவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...