வால்பாறையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்ட மிலாது விழா

வால்பாறையில் சுன்னத் ஜமா அத் ஜுமா மசூதி மதரச மஹாலில் மிலாது விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஹாஜி. பூக்கோயதங்கல் தலைமை வகித்தார். ஹாஜி. என்.கே.கமாலுதீன் முத்தவல்லி, ஜனாப். அல்லாஜ் தலைவர் பி.ஆர்எஸ். அப்துல் காதர், செயலாளர் பஷீர் அஹமது, இமாம் இப்ராஹிம் சஃகாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



முன்னதாக மவுலூதும், தப்ரூக் விநியோகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முனவ்விருல் இஸ்லாம் மதரசா மாணவர்களின் தப்புமுட்டு, நபிகள் நாயகம் பற்றி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் சேரன் யூசுப், குஞ்சுமுகமது, மனாப் ஜமாஅத் கமிட்டியினர் ரிலீப் கமிட்டியினை செய்திருந்தனர். 

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை உஸ்தாத் மார்கள் அபூபக்கர், மஜீத் ஷெபீக் ஆகியோர்கள் செய்துவைத்தனர். முகமது முன்னின்று நடத்தினார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை விதவைகள் மற்றும் கணவனால் கவிடப்பட்ட பெண்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. இறுதியில் முகமது ஜாபர் நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...