வால்பாறையில் சுன்னத் ஜமா அத் ஜுமா மசூதி மதரச மஹாலில் மிலாது விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஹாஜி. பூக்கோயதங்கல் தலைமை வகித்தார். ஹாஜி. என்.கே.கமாலுதீன் முத்தவல்லி, ஜனாப். அல்லாஜ் தலைவர் பி.ஆர்எஸ். அப்துல் காதர், செயலாளர் பஷீர் அஹமது, இமாம் இப்ராஹிம் சஃகாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மவுலூதும், தப்ரூக் விநியோகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முனவ்விருல் இஸ்லாம் மதரசா மாணவர்களின் தப்புமுட்டு, நபிகள் நாயகம் பற்றி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் சேரன் யூசுப், குஞ்சுமுகமது, மனாப் ஜமாஅத் கமிட்டியினர் ரிலீப் கமிட்டியினை செய்திருந்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை உஸ்தாத் மார்கள் அபூபக்கர், மஜீத் ஷெபீக் ஆகியோர்கள் செய்துவைத்தனர். முகமது முன்னின்று நடத்தினார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை விதவைகள் மற்றும் கணவனால் கவிடப்பட்ட பெண்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. இறுதியில் முகமது ஜாபர் நன்றி கூறினார்.

முன்னதாக மவுலூதும், தப்ரூக் விநியோகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முனவ்விருல் இஸ்லாம் மதரசா மாணவர்களின் தப்புமுட்டு, நபிகள் நாயகம் பற்றி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் சேரன் யூசுப், குஞ்சுமுகமது, மனாப் ஜமாஅத் கமிட்டியினர் ரிலீப் கமிட்டியினை செய்திருந்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை உஸ்தாத் மார்கள் அபூபக்கர், மஜீத் ஷெபீக் ஆகியோர்கள் செய்துவைத்தனர். முகமது முன்னின்று நடத்தினார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை விதவைகள் மற்றும் கணவனால் கவிடப்பட்ட பெண்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. இறுதியில் முகமது ஜாபர் நன்றி கூறினார்.