வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா


வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்புறை ஆற்றினார். வால்பாறை வட்டாட்சியர் கோமதி தலைமை வகித்தார்.



தேயிலைத் தோட்ட நிறுவன ஆய்வாளர் ஜே.ஏ.முகமது யூசுப், வழக்கறிஞர் அசோகன், வால்பாறை நூலகம் வேலூச்சாமி, வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெபராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 

இதைத்தொடர்ந்து, அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநர் கணேஷ் சிறப்புறையாற்றுகையில், வால்பாறை மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் படித்த அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பெறும் விதமாக இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.



வட்டாட்சியர் கோமதி பேசுகையில், வாரத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் நடக்கும் இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்து இப்பகுதியில் படித்த மாணவ மாணவிகள் அனைவரும் எஸ்டேட்டில் தங்களது பெற்றோர்களின் கஷ்ட நிலையினை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வலியுறுதினார். 

இந்நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கணேஷ், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...