வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்புறை ஆற்றினார். வால்பாறை வட்டாட்சியர் கோமதி தலைமை வகித்தார்.

தேயிலைத் தோட்ட நிறுவன ஆய்வாளர் ஜே.ஏ.முகமது யூசுப், வழக்கறிஞர் அசோகன், வால்பாறை நூலகம் வேலூச்சாமி, வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெபராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநர் கணேஷ் சிறப்புறையாற்றுகையில், வால்பாறை மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் படித்த அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பெறும் விதமாக இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.

வட்டாட்சியர் கோமதி பேசுகையில், வாரத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் நடக்கும் இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்து இப்பகுதியில் படித்த மாணவ மாணவிகள் அனைவரும் எஸ்டேட்டில் தங்களது பெற்றோர்களின் கஷ்ட நிலையினை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வலியுறுதினார்.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கணேஷ், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.