குன்னூர் சாலை பகுதியில் காட்டு எருமை நுழைந்ததால் போக்குவரத்து பாதிப்பு


குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் ஞாயிறன்று காலை ஒரு காட்டெருமை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



புத்தாண்டு நாளான ஞாயிறன்று (நேற்று) காலை குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் கூடியிருந்தனர். அப்போது ஒரு காட்டெருமை அந்த சாலையில் திடீரென நுழைந்தது. இதனைக் கண்ட மக்கள் செய்வதறியாது நின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் காட்டெருமை சுற்றித்திறிய துவங்கியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே காட்டெருமை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து, இதுபோன்ற காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் இருவரை காட்டெருமை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதுபோல் நிகழாமல்  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...