விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்- திட்டமிட்டு வெற்றிபெற்ற கோவை காவல் துறை


கடந்த 2015 மற்றும் 2016 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்டது போன்ற உயிரிழப்பு மற்றும் சாலை விபத்துகள் 2017 புத்தாண்டு தினத்தன்று ஏற்படக் கூடாது என திட்டமிட்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த 15 நாட்களாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், நட்சத்திர ஓட்டகள் மற்றும் டாக்ஸி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கொண்டாட்டம் முடிந்து செல்பவர்கள் பத்திரமாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் செய்திகள், வானோலி மூலம் விழிப்புணர்வு, உள்ளூர் கேபிள் சேனல்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



22 வாகன சோதனை மையங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனங்கள் ஓட்டிய 1000 பேர் காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்ட ஷாமியானா பந்தலில் அமர வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களது நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டது.

12 மணிக்கு மேல் காவல்துறை சார்பாக கேக் வெட்டி கொடுக்கபட்டது. 22 வாகன பரிசோதனை மையங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தனர். நா.மகாலிங்கம் மன நலம் ஆலோசனை மையம் மற்றும் யெங் இந்தியன் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தன்னார்வலர்களாகவும் பணியாற்றினர்.

கோவை டைடல் பார்க்கை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சித்தார்த் காவல்துறையின் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஈர்க்கப்பட்டு தன்னார்வலராக சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான ஏற்பாடுகளை காவல் துணை ஆணைய‌ர் லட்சுமி (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல்துறை ஆணையர் 

சரவணன் (போக்குவரத்து) ஆகியோர் மேற்கொண்டனர். இவற்றின் மூலம் 2017 ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் உயிரிழப்பு மற்றும் விபத்துகளின்றி முடிந்தது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...