அரசு பொதுமருத்துவமனை குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி புத்தாண்டை கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும மாணவர்கள்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்திலும், அரசு பொது மருத்துவமனையிலும் நடத்தியது.



கோவைபுதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புத்தாண்டு நிகழ்ச்சியினை வெறும் சிறப்பு சொற்பொழிவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மட்டும் இல்லாமல், வருகின்ற வருடத்தில் மாணவர்களின் தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கை திறன்களை பாடத்திட்டத்துடன் வகுப்பு நேரங்களில் செயல்படுத்த இதன் ஆசிரியர்கள் உறுதிமொழியெடுத்தனர்.



இதைத்தொடர்ந்து, கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையின் மாணவர்கள் கடந்த எட்டு வருடங்களாக தாங்களே வடிவமைத்த ஆடைகள் மற்றும் துண்டுகளை கோவை அரசு பொது மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு மற்றும் அதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதல்வர் ஏ.இரமேஷ், பாபா ஞானகுமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...