கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்திலும், அரசு பொது மருத்துவமனையிலும் நடத்தியது.

கோவைபுதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புத்தாண்டு நிகழ்ச்சியினை வெறும் சிறப்பு சொற்பொழிவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மட்டும் இல்லாமல், வருகின்ற வருடத்தில் மாணவர்களின் தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கை திறன்களை பாடத்திட்டத்துடன் வகுப்பு நேரங்களில் செயல்படுத்த இதன் ஆசிரியர்கள் உறுதிமொழியெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையின் மாணவர்கள் கடந்த எட்டு வருடங்களாக தாங்களே வடிவமைத்த ஆடைகள் மற்றும் துண்டுகளை கோவை அரசு பொது மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு மற்றும் அதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதல்வர் ஏ.இரமேஷ், பாபா ஞானகுமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.